பஞ்சாலையில் தீ விபத்து தொழிலாளி உயிரிழப்பு

பஞ்சாலையில் தீ விபத்து தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே குடைபாறைப் பட்டியில் உள்ள பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறினர்.

ஆனால், அந்தோணியார் நகரைச் சேர்ந்த தொழிலாளி பிரவீன்(27) ஆலைக்குள் சிக்கிக்கொண்டார். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். தீ பரவியதால் ஏற்பட்ட புகை காரணமாக ஆலைக்குள் சிக்கியிருந்த பிரவீன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரி ழந்தார். திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in