என்ன செய்தார் எம்.பி.?

என்ன செய்தார் எம்.பி.?
Updated on
1 min read

எம்.பி. மாணிக்தாகூரிடம் பேசினோம். “விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மதுரை விமான நிலையம் 130 கோடி ரூபாயில் சர்வதேசத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் கேந்திர வித்யாலயா தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சுமார் 62 ஆயிரம் பேருக்கு 862 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 350 கோடி ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. 13 ரயில்கள் விருதுநகர் வழியாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க சீனப் பட்டாசு இறக்குமதிக்குத் தடை ஆணை பெற்றுத்தந்தோம். ஐந்து கோடி ரூபாயில் பட்டாசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in