சமூக ‘வலை’ தளம் - சில அலர்ட் குறிப்புகள்

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம். அந்தத் தாக்கம் ஒருவரது மனநலத்துக்கு நன்மையும் தரலாம், தீங்கும் விளைவிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  

இளம் வயதிலேயே மிக அதிக நேரம் சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடப்பதால் மூளை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படலாம்.   

இதனால் கற்கும் திறன், ஆரோக்கியமான நடத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் போன்றவற்றில் சிக்கல் ஏற்படலாம்.   

சமூக வலைதளங்களின் அமைப்புமுறை (algorithm) நாம் எதை அதிகம் தேடுகிறோமோ அது குறித்த தகவல்களையே தொடர்ந்து வழங்கும் வகையில் இயங்குகிறது.

வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை யூடியூப், இன்ஸ்டகிராம் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இத்தளங்களில் அறிவுசார் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. மாணவர்கள் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.    

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சமூக வலைதளங்களின் சாதக பாதகங்களை எடுத்துக்கூறி வெளிப்படைத்தன்மையுடன் உரையாடலாம்.   

தவறுகள் ஏற்படும்போது அவற்றிலிருந்து மீள பெற்றோர் உதவுவார்கள், வழிகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும்.  

சமூக ஊடகங்களை எந்த வயதில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற தெளிவு பெற்றோருக்கு இருக்க வேண்டும். நேரக் கட்டுப்பாட்டோடு திட்டமிட வேண்டும். 

தாங்கள் விதிக்கும் விதிமுறைகளை முதலில் பெற்றோரும் கண்டிப்பாகப் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். | கைடன்ஸ்: டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

Web Stories

மேலும் படிக்க...