சைவம் மட்டுமே சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?
சைவ உணவை மட்டும் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில்...
சைவ உணவு என்றால் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஆனால், சைவம் பிரியர்கள் வறுத்த, பொறித்த உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, நெய் உணவுகள், பாலால் ஆன கொழுப்பு உணவை அதிகம் உண்பர்.
சைவம் சாப்பிடும் உணவுகள் தரும் கலோரிகளைக் கணக்கிட்டால், அசைவம் சாப்பிடுவோருக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆக... உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது போன்ற மற்ற பிரச்சினைகள் மட்டுமின்றி..
மாரடைப்பு போன்ற ஆபத்தான பிரச்சினைகளும் அசைவ உணவு பிரியர்கள் போலவே உணவு பிரியர்களுக்கும் ஏற்படுகின்றன.
சைவ உணவு அதிகம் சாப்பிட்டு, உடற்பயிற்சி ஏதும் செய்யாதோருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்புக்கு காரணமான உடல் பருமன் பிரச்சினை ஏற்படலாம்.
சைவ உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்களை அதிகம் சேர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவை வெகுவாக குறைக்க வேண்டும்.
சைவம் என்றால், அது 100 சதவீதம் சைவமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உரிய ஆரோக்கியப் பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.