நேதாஜி பிறந்தநாள்: தலைவர்கள் புகழஞ்சலி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (23.03.2023) நாடு முழுவதும் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி: “பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவதோடு இந்திய வரலாற்றில் அவர் அளித்த ஈடு இணையில்லா பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.”

அமித் ஷா: " 126-வது பிறந்த நாளில் நாடே நேதாஜியை நினைவுகூர்ந்து அவரது தைரியத்திற்கும், போராட்டத்திற்கும் தலைவணங்குகிறது. அனைவருக்கும் எனது பராக்ரம நாள் வாழ்த்துகள்."

ராகுல் காந்தி: "வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தைரியம் மற்றும் போராட்ட குணம், நமது நாட்டின் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க இன்றும் இந்தியர்களை தூண்டிக் கொண்டிருக்கிறது."

மல்லிகார்ஜுன கார்கே: "ஜெய் ஹிந்த்", "உங்கள் உதிரத்தைக் கொடுங்கள்... நான் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்" என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழக்கங்கள் நாட்டின் மீதான பற்றினை தூண்டின."

Web Stories

மேலும் படிக்க...