சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் திங்கள்கிழமை ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்​டது. பிப்​ர​வரியில் தாக்​கல் செய்யப்பட உள்ள குற்​றப்​பத்​திரிக்​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட வாய்ப்பு இருப்​ப​தாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 12-ம் தேதி ஆஜரா​னார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை மீண்டும் அவர் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு விசா​ரணை தொடங்கியது. கூட்ட நெரிசல் தொடர்​பாக அதி​காரி​கள் அடுக்​கடுக்​காக கேள்வி​களை எழுப்​பினர். குறிப்​பாக, கூட்டம் கட்​டுக்​கடங்​காமல் போன பிறகும் ஏன் உரையைத் தொடர்ந்​தீர்​கள், தாமதத்​துக்கு திட்​ட​மிட்ட காரணம் எது​வும் உண்டா, தாமதமாகும் தகவலை மக்களுக்கு ஏன் அறிவிக்​க​வில்​லை, போலீ​ஸார் கொடுத்த பாது​காப்பு வழி​முறை​கள் மீறப்​பட்​ட​தா என்​பது உட்பட பல்​வேறு கேள்விகளை அதி​காரி​கள் எழுப்​பினர். அதற்கு விஜய் விளக்​கம் அளித்​த​தாக தெரி​கிறது.

‘காவல் துறை வழங்​கிய அனைத்து பாது​காப்பு நெறிமுறைகளை​யும் முறை​யாக பின்​பற்​றினேன். ஆனால், கூட்​டத்தை கட்​டுப்​படுத்த போதிய அளவில் போலீ​ஸார் நியமிக்​கவில்​லை’ என்று விஜய் கூறிய​தாக தெரி​கிறது. சில கேள்வி​களுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்பிக்க விஜய் தரப்​பில் கூடு​தல் அவகாசம் கேட்கப்பட்ட​தால், அவர் மீண்​டும் விசா​ரணைக்கு அழைக்கப்படலாம் என்​றும் தெரி​கிறது. இந்த விசா​ரணை மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்​தது. பின்னர் அங்கிருந்து விஜய் புறப்பட்​டார்.

பிப்​ர​வரி​யில் இந்த வழக்​கின் குற்​றப்​பத்​திரி​கையை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வரு​கிறது. குற்றப்பத்திரி​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட அதிக வாய்ப்பு உள்​ள​தாக சிபிஐ வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து சிடிஆர் நிர்​மல்குமார் டெல்லியில் கூறும்போது, “விஜய்​யிடம் விசா​ரணை முடிந்தது. இனி சம்மன் எது​வும் இல்லை. அவரது பிரச்​சாரம் திட்டம் தொடர்​பான தகவல் களை சிபிஐ கேட்டு தெரிந்து கொண்டது. குற்​றப்​பத்​திரி​கையில் விஜய் பெயர் இடம்பெறு​வது, கைது என ஊடகங்​களில் பரவி வரும் தகவல்​ முற்​றி​லும்​ தவறு. இவை அனைத்​தும்​ தி​முக​வால் பரப்​பப்​படும்​ வதந்​தி” என்​றார்​.

சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பா?
கோழி இறைச்சி விலை அதிகரிப்பு ஏன்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in