செல்வப்பெருந்தகை ‘மாற்றம்’... தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு தினங்களில் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகியிருப்பதால் சத்தியமூர்த்தி பவன் அனல் தகிக்கிறது. ‘தமிழக தேர்தலையொட்டிய செயல்பாடுகளில் செல்வப்பெருந்தகை மீது ராகுல் காந்திக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய வருத்தம் உண்டு. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது என செல்வப்பெருந்தகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ் அழகிரி, தங்கபாலு போன்றவர்களும் வாய்ப்பை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகிறார்கள். ஆனால். ஏற்கெனவே மாநிலத் தலைவர் பதவியில் இல்லாத புதியவர்களை நியமிக்கவே டெல்லி தலைமை விரும்புகிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிகவும் உறுதியாக இருக்கிறது’ என்று சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.