ராமதாஸ் + அன்புமணி பின்னணியும், ஸ்ரீகாந்தி அதிருப்தியும்! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

பாமகவில் ஒன்​றரை ஆண்​டு​களாக நீடித்து வந்த தந்தை - மகன் அதி​காரப் பகிர்வு பிரச்​சினை ராம​தாஸ் திருமண நாளில் முடிவுக்கு வந்தது. பாமக நிறு​வனர் ராமதாஸுக்கும் அதன் தலை​வர் அன்புமணிக்கும் இடையி​லான பிரச்​சினை​யால் கடந்த சட்​டப்​பேரவை தேர்தலில் இருதரப்​பும் தனித்​தனி​யாக செயல்பட்டனர்.

ராம​தாஸின் மிகக் கடுமை​யான விமர்​சனத்​தை​யும் மீறி சவுமியா அன்​புமணி உள்பட 4 பாமக எம்​எல்​ஏக்​கள் வெற்றி பெற்​றனர். தேர்தலுக்கு பிறகு அன்புமணி​யின் கை ஓங்​கியது. தைலாபுரத்துக்கு வரு​வதை பாமக​வினர் குறைத்​துக் கொண்டனர். யாரை​யும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளுக்காக சில அறிக்​கைகளை மட்​டும் ராமதாஸ் வெளி​யிட்டு வந்​தார்.

இதற்​கிடை​யில் தந்​தை, மகனை இணைக்க குடும்ப உறவுகளும், முக்​கிய நபர்​களும் மீண்​டும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதற்காக ராம​தாஸின் திருமண நாள் சரியானதாக இருக்​கும் என நாள் குறிக்​கப்​பட்​டது.

அதன்​பேரில் ராம​தாஸ் - சரஸ்​வதி இணை​யரின் 61-வது திருமண நாளை​யொட்டி அவர்​களிடம் ஆசி பெறுவதற்காக அன்​புமணி, அவரது மனைவி சவுமி​யா, மகள்​கள் சம்யுக்​தா, சங்​கமித்​ரா, சஞ்​சுத்​ரா, இரு மருமகன்கள், பேரப்பிள்ளைகள் என அனை​வரும் புதன்கிழமை தைலாபுரத்​துக்கு வருகை தந்​தனர். ராமதாஸ் தரப்​பினர் அவர்​களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்​றனர்.

ஒன்​றரை ஆண்​டு​களாக மகனை சந்​திப்​பதை தவிர்த்துவந்த ராமதாஸ் நேற்று மகனை கண்​டதும் கட்டித்தழு​வி​னார். இரு​வரும் கண்ணீர் சிந்​தினர். தாயையும் அன்​புமணி அரவணைத்தார். மேலும் பேரப்பிள்​ளை​கள் மற்​றும் கொள்ளு பேரப் பிள்ளைகளையும் கொஞ்சி மகிழ்ந்​தார். அப்​போது அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனை​வரும் அவர்​களது காலில் விழுந்து ஆசிபெற்​றனர். பின்​னர் ஒன்​றாக அமர்ந்து மதிய உணவு சாப்​பிட்​டனர்.

பின்​னர் அன்​புமணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அப்பா - அம்​மா​வின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்​துடன் சென்று வாழ்த்​துகளை​யும், ஆசிர்வாதங்களை பெற்​றுக் கொண்டோம். இனி நல்​லது நடக்​கும்” என்​றார்.

ஒன்​றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்​தது பாமகவினரை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்தி இருக்​கிறது. ராம​தாஸை அன்​புமணி குடும்​பத்​துடன் வந்து சந்தித்தபோது அவரது இளைய சகோ​தரி கவிதா உடன் இருந்​தார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்​தி, அவரது மகன் முகுந்​தன் உள்​ளிட்​டோர் புறக்​கணித்​தனர்.

தலை​வர் பதவியை தன்​வசப்​படுத்​திக் கொண்​ட​தாக அறிவித்த ராம​தாஸ், அன்புமணிக்கு வழங்​கிய செயல் தலை​வர் பதவியை மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார். தந்தை - மகன் ஒன்​றாக இணைந்தாலும் குடும்​பத்​தில் உள்ள பிரச்​சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்​கிறது. பாமக செயல் தலைவர் பதவி​யில் ஸ்ரீகாந்தி இருப்​ப​தால் கட்​சி​யிலும் புகைச்​சல் தொடரும் என கருதப்​படு​கிறது.

வலுக்கட்டாயமாக கட்சிப் பதவியில் அமரவைக்கப்பட்டவர் ஸ்ரீகாந்தி. ஆகவே, எம்.பி., எம்எல்ஏ ஆகாமல் ஓயப்போவதில்லை என்ற திட்டத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனக்கு இப்படியொரு அதிகாரக் கனவு இருக்க, அப்பாவும் பிள்ளையும் ராசியாகிவிட்டால் தனது எதிர்பார்ப்பு கனவாகவே முடிந்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறாராம் மகள்.

ராமதாஸ் + அன்புமணி பின்னணியும், ஸ்ரீகாந்தி அதிருப்தியும்! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in