புதினுக்காக மரபை உடைத்த மோடி... ராகுல் கொந்தளிப்பது ஏன்?

வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அவர்களை வரவேற்பது வழக்கம். மிக முக்கிய தலைவர்களை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்பார். அந்த வகையில், தற்போது ஏழாவது உலகத் தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி மரபுகளை உடைத்து டெல்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்​தித்து பேசுவதை மத்​திய அரசு விரும்​ப​வில்லை என்று ராகுல் காந்தி குற்​றம் சாட்டி உள்ளார். இது தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி கூறும்போது, “வெளி​நாட்டு தலை​வர்​கள் இந்​தி​யா​வுக்கு வருகை தரும்​போது எதிர்க்​கட்சி தலை​வரை சந்​தித்​துப் பேசுவது மரபு ஆகும். முன்​னாள் பிரதமர்​கள் வாஜ்​பாய், மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தில் இந்த மரபு கண்​டிப்​புடன் பின்​பற்​றப்​பட்​டது.

ஆனால், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான தற்​போதைய மத்​திய அரசு மரபை மாற்றி உள்​ளது. தற்​போது வெளி​நாட்டு தலைவர்​கள் இந்​தி​யா​வுக்கு வரும்​போது எதிர்க்​கட்சி தலை​வரை சந்​திக்​காமல் செல்​கின்​றனர். நான் வெளி​நாடு செல்​லும்​போது​ கூட, அந்த நாடு​களின் தலை​வர்​கள் என்னை சந்​திக்க வேண்​டாம் என்று மத்​திய அரசு தரப்​பில் அறி​வுறுத்​தப்​படு​கிறது.

தற்​போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, நான் சந்​தித்து பேசுவதை மத்​திய அரசு விரும்​ப​வில்​லை. இது இந்திய வெளி​யுறவுத் துறையின் எதிர்மறை சிந்​தனையை வெளிப்​படுத்​துகிறது. ஆளும் கட்​சிக்​கும் எதிர்க்​கட்​சிக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால் எதிர்க்​கட்சி தலை​வரும் இந்​தி​யா​வின் பிரதிநிதி என்​பதை மத்​திய அரசு மறந்​து​விடக் ​கூ​டாது” என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

இதே விவ​காரம் குறித்து காங்​கிரஸ் பொதுச்​ செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கூறும்​போது, “வெளி​நாடு​களின் தலை​வர்​கள், இந்​தி​யா​வுக்கு வருகை தரும்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரை சந்​திப்​பது மரபு ஆகும். இந்த மரபை மத்​திய அரசு உடைத்​திருக்​கிறது. ஜனநாயக மரபு​களை காக்க வேண்​டியது மத்​திய அரசின்​ கடமை ஆகும்​” என்​று தெரி​வித்​தார்​.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in