அண்ணாமலை - பாஜக ‘உறவு’ இனி எப்படி? - ஒரு ‘ஹிஸ்டரி’ பார்வை | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். பல காரணங்கள் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அண்ணாமலைக்கு முன்பே குஜராத்தில் கேசுபாய் பட்டேல், சங்கர் சிங் வகேலா, மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங், ஜார்க்கண்டில் யஷ்வந்த் சின்ஹா, கர்நாடகாவில் எடியூரப்பா போன்றோர் பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ளனர்.
இவர்களில் சின்ஹாவைத் தவிர மற்ற அனைவருமே பாஜக சார்பில் முதல்வராகப் பதவி வகித்தவர்கள். அண்ணாமலைக்கும் பாஜகவுக்குமான தொடர்பு குறித்து விவாதங்கள் வலுத்துள்ள வேளையில், பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவர்களின் அரசியல் பாதையை கவனித்தால், அண்ணாமலை - பாஜக ‘உறவு’ இனி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை கண்டடையும் வகையில் விவரிக்கும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.