உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை நியூஸிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்ற அரை இறுதி ஆட்டத்தில், அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 106 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது.