பின்னர், கெங்கையம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்ற தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவற்றை தேர் மீது துவி நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்