உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுத்தோறும் மாட்டுப் பொங்கல் தினத்தில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், கோ பூஜையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு இன்று (ஜன.16) மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு 2,000 கிலோ காய்கறி, கனி, இனிப்பு வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, 108 பசுக்களுக்கு கோ பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஆர்.வெங்கடேஷ்