பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.13-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மலைக்கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர்கள், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.