மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும், ஆடி பவுர்ணமியன்று தேரோட்டத் திருவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனையொட்டி ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்பின் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பச் சப்பரம், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.