ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் கஜேந்திரமோட்சம் நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு

ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் கஜேந்திரமோட்சம் நிகழ்வு - புகைப்படத் தொகுப்பு
Published on
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் கஜேந்திரமோட்சம் என்ற புராண நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமி அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் கஜேந்திரமோட்சம் என்ற புராண நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமி அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து உற்சவர் நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபம் காவிரி பணித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து உற்சவர் நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபம் காவிரி பணித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
அங்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து மாலை புறப்பட்டு காவிரிக் கரைக்குச் சென்றார்.
அங்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து மாலை புறப்பட்டு காவிரிக் கரைக்குச் சென்றார்.
அங்கு கஜேந்திரமோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கு கஜேந்திரமோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கஜேந்திரனாக ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் நடித்துக் காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்துப் பரவசமடைந்தனர்.
இதில் கஜேந்திரனாக ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் நடித்துக் காட்டியது. இதை ஏராளமான பக்தர்கள் பார்த்துப் பரவசமடைந்தனர்.
பின்னர், இரவு  நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பின்னர், இரவு நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in