பின்னர், தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருள, தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி. ஆஷிஷ் ராவத், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறைஇணை ஆணையர் (பொறுப்பு) சூரியநாராயணன், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.