பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருக்கும்போதே, பல முயற்சிகள் எடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். தற்போது முதல்வர், துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது...