கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையின் அனுமதி மறுப்பால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.