பிரதமர் மோடியில் தியானத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்திய கடற்படையினர், மெரைன் போலீஸார், விமானப்படை வீரர்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்திய கடற்படையை சேர்ந்த இரு கப்பல்களில் கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றியவாறு உள்ளனர்.