அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் அதிமுகவினர் ஓபிஎஸ், பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழுவை கூட்டியது. அதில் பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.