வெள்ளத்தில் டெல்லி மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் - போட்டோ ஸ்டோரி

வெள்ளத்தில் டெல்லி மக்கள் பரிதவிக்கும் காட்சிகள் - போட்டோ ஸ்டோரி
Published on
தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழையே பெய்யாமல் சூழ்ந்துள்ள இந்த வெள்ளம் நகரவாசிகளை திகைப்பில் ஆழ்த்து திணறடித்து வருகிறது.
மழையே பெய்யாமல் சூழ்ந்துள்ள இந்த வெள்ளம் நகரவாசிகளை திகைப்பில் ஆழ்த்து திணறடித்து வருகிறது.
இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை மூடப்படுவதாக தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை மூடப்படுவதாக தொல்லியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
திடீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சாக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.
திடீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சாக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.
டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது.
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை பொதுப் பணித் துறை மேற்கொண்டு வருகிறது.
லோக் நாயக் மருத்துவமனையிலிருந்து எமர்ஜென்சி வார்டில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லோக் நாயக் மருத்துவமனையிலிருந்து எமர்ஜென்சி வார்டில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாலை தொடங்கி டெல்லி சராய் காலே கான் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலை தொடங்கி டெல்லி சராய் காலே கான் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்
“வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
“வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன்
மேலும், “மக்களைக் காப்பதே இப்போதைய தலையாய கடமை. இந்த அவசர காலத்தில் மக்கள் ஒருவொருக்கொருவர் உதவியாக இருக்குமாறு வேண்டுகிறேன்
மழை இல்லாமல் பெய்துள்ள திடீர் வெள்ளம் குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில்,
மழை இல்லாமல் பெய்துள்ள திடீர் வெள்ளம் குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில்,
நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளம் பாய்வதன் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வெகு துரிதமாக யமுனையை வந்தடைந்து அங்கு நீர்மட்டத்தை தொடர்ந்து உயரச் செய்து வருகிறது.
நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக அது கடந்து செல்ல ஒரு குறுகிய பாதை மட்டுமே உள்ளது. வெள்ளம் பாய்வதன் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் பல வழிகளிலும் உபரி நீர் வெகு துரிதமாக யமுனையை வந்தடைந்து அங்கு நீர்மட்டத்தை தொடர்ந்து உயரச் செய்து வருகிறது.
அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அதிக மழையில்லாவிட்டாலும் கூட யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது
அதேபோல், வண்டல் மண் அதிகமாக சேர்ந்ததன் காரணமாக யமுனை ஆற்றுப் படுகையும் உயர்ந்துள்ளது. இதனாலேயே அதிக மழையில்லாவிட்டாலும் கூட யமுனையின் நீர்மட்டம் தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது
படிப்படியாக வெள்ளம் வடியும்: போக்குவரத்து ஸ்தம்பித்து, குடிநீர் விநியோகம் பாதித்து பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டுள்ள சூழலில் இன்றிலிருந்து யமுனையில் வெள்ள நீர் படிப்படியாகக் வடியும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
படிப்படியாக வெள்ளம் வடியும்: போக்குவரத்து ஸ்தம்பித்து, குடிநீர் விநியோகம் பாதித்து பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டுள்ள சூழலில் இன்றிலிருந்து யமுனையில் வெள்ள நீர் படிப்படியாகக் வடியும் என்று மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி போக்குவரத்துத் துறை உத்தரவினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் கைலாஷ் காலட் ,
டெல்லி போக்குவரத்துத் துறை உத்தரவினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் கைலாஷ் காலட் ,
“அதேபோல் ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக சிங்கு எல்லையில் நிறுத்தப்படும். உணவு மற்றும் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்தத் தடையில்லை
“அதேபோல் ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக சிங்கு எல்லையில் நிறுத்தப்படும். உணவு மற்றும் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்தத் தடையில்லை
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை (ஜூலை 12) யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தது. இது மாலை 5 மணிக்குள் 208.75 மீட்டர் என்ற அளவை எட்டும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை (ஜூலை 12) யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி யமுனை ஆற்றில் 208.51 மீட்டர் அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தது. இது மாலை 5 மணிக்குள் 208.75 மீட்டர் என்ற அளவை எட்டும் என்று மத்திய நீர் வள ஆணையம் கணித்துள்ளது.
“வாசிர்பாத், சந்தர்வால், ஓக்லா நீரேற்று நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்” என்று முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“வாசிர்பாத், சந்தர்வால், ஓக்லா நீரேற்று நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்” என்று முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“டெல்லியில் எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதோ அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும்” என்று முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
“டெல்லியில் எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதோ அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும்” என்று முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவுட்டர் ரிங் ரோடு, காஷ்மீரி கேட் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராஜ்காட் முதல் ஐடிஓ வரையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவுட்டர் ரிங் ரோடு, காஷ்மீரி கேட் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராஜ்காட் முதல் ஐடிஓ வரையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சிவில் லைன்ஸ் பகுதியைச் சுற்றியும் வெள்ளம் நீர் தேங்கியுள்ளது.
சிவில் லைன்ஸ் பகுதியைச் சுற்றியும் வெள்ளம் நீர் தேங்கியுள்ளது.
வாசிராபாத் மேம்பாலம், சாண்ட்கி ராம் அகாரா இடையேயான அவுட்டர் ரிங் ரோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
வாசிராபாத் மேம்பாலம், சாண்ட்கி ராம் அகாரா இடையேயான அவுட்டர் ரிங் ரோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி மார்க், கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மகாத்மா காந்தி மார்க், கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
டெல்லி நகருக்குள் யமுனை நதி நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்
டெல்லி நகருக்குள் யமுனை நதி நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்
ஆம் ஆத்மி - பாஜக வார்த்தை போர்: டெல்லியில் யமுனை நதியின் வெள்ளம் புதன்கிழமை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஓடியது. வியாழக்கிழமை காலையில் தாழ்வான பகுதிகளைத் தாண்டி, ஐடிஓ, சிவில் லைன்ஸ், தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இது குறித்து பாஜக மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே புதிய வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.
ஆம் ஆத்மி - பாஜக வார்த்தை போர்: டெல்லியில் யமுனை நதியின் வெள்ளம் புதன்கிழமை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஓடியது. வியாழக்கிழமை காலையில் தாழ்வான பகுதிகளைத் தாண்டி, ஐடிஓ, சிவில் லைன்ஸ், தலைமைச் செயலகம் உட்பட முக்கியப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. இது குறித்து பாஜக மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே புதிய வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.
ஹரியாணா அரசு யமுனையில் தண்ணீர் திறந்து விட்டது குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்
ஹரியாணா அரசு யமுனையில் தண்ணீர் திறந்து விட்டது குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்
டெல்லியின் தற்போதைய நிலை குறித்து பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவொன்றில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியின் தற்போதைய நிலை குறித்து பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவொன்றில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் கம்பீர்,
அந்தப் பதிவில் கம்பீர்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், டெல்லியின் நிலைக்காக பாஜக மற்றும் ஹரியாணா அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா கக்கரின் ட்விட்டர் பதிவில்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், டெல்லியின் நிலைக்காக பாஜக மற்றும் ஹரியாணா அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த பிரியங்கா கக்கரின் ட்விட்டர் பதிவில்,
குறைந்தபட்சம் டெல்லியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்காவது அவகாசம் கிடைத்திருக்கும். பாஜக எப்போதும் அதன் அழுக்கு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
குறைந்தபட்சம் டெல்லியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்காவது அவகாசம் கிடைத்திருக்கும். பாஜக எப்போதும் அதன் அழுக்கு அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
பஞ்சாப்பின் தொடர் எதிர்ப்பு காரணமாக இமாச்சல பிரதேச அரசு, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைத்தது. ஆனால், கல்வியறிவு இல்லாத ஹரியாணா அரசு அப்படி செய்யவில்லை
பஞ்சாப்பின் தொடர் எதிர்ப்பு காரணமாக இமாச்சல பிரதேச அரசு, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைத்தது. ஆனால், கல்வியறிவு இல்லாத ஹரியாணா அரசு அப்படி செய்யவில்லை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in