டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் என பல வட இந்திய பகுதிகளில் அதி கனமழை நீடித்து வருகிறது. அங்கு மூன்றாவது நாளாக மழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை பல இடங்களில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலில் மட்டும் 17 பேர் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக இதுவரை 28 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.