இயந்திரமாக சுழலும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்..! - புகைப்படத் தொகுப்பு

இயந்திரமாக சுழலும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்..! - புகைப்படத் தொகுப்பு
Published on
நெல்மணிகளை அரிசியாக மாற்றும் பயணத்தின் பின்னணியில் பலரின் உழைப்பு கலந்திருக்கிறது. இதில் இவர்களின் கரங்களுக்கு முக்கியமான பணி இருக்கிறது. | படங்கள் - ஆர். வெங்கடேஷ்.
நெல்மணிகளை அரிசியாக மாற்றும் பயணத்தின் பின்னணியில் பலரின் உழைப்பு கலந்திருக்கிறது. இதில் இவர்களின் கரங்களுக்கு முக்கியமான பணி இருக்கிறது. | படங்கள் - ஆர். வெங்கடேஷ்.
நாம் அன்றாடம் உணவாகப் பயன்படுத்தும் அரிசி முதலில் மண்ணில் நெல் விதையாகப் புதைந்து, இயற்கையின் அருள் பெற்று முளைத்து மண்ணை முட்டி மோதி, பயிராக வளர்ந்து, பூத்து, நெல் மணியாக வளர்ந்து அரிசியைத் தருகிறது.
நாம் அன்றாடம் உணவாகப் பயன்படுத்தும் அரிசி முதலில் மண்ணில் நெல் விதையாகப் புதைந்து, இயற்கையின் அருள் பெற்று முளைத்து மண்ணை முட்டி மோதி, பயிராக வளர்ந்து, பூத்து, நெல் மணியாக வளர்ந்து அரிசியைத் தருகிறது.
3 முதல் 5 மாதங்கள் வரை பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து, இயற்கை இடர்களுடன் போராடி சாகுபடி செய்து நெல் மணிகளை நெல் மூட்டைகளாக்கி லாரியில் ஏற்றி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.
3 முதல் 5 மாதங்கள் வரை பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து, இயற்கை இடர்களுடன் போராடி சாகுபடி செய்து நெல் மணிகளை நெல் மூட்டைகளாக்கி லாரியில் ஏற்றி ஆலைக்கு அனுப்பப்படுகிறது.
ஆலையில் நெல், அரிசியாக உருமாறுகிறது. அது மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், முதலில் நெல் மூட்டைகளாக இவர்கள் கைகளுக்கு வர வேண்டும்.
ஆலையில் நெல், அரிசியாக உருமாறுகிறது. அது மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், முதலில் நெல் மூட்டைகளாக இவர்கள் கைகளுக்கு வர வேண்டும்.
யார் இவர்கள்?. விவசாயிகளின் வேர்வைக்கு மேலும் உறுதுணையாக இருந்து கைரேகை மறைந்து போக உழைத்து, திசையெங்கும் நெல், அரிசியை ரயில் மூலம் கொண்டு சேர்க்கும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்.
யார் இவர்கள்?. விவசாயிகளின் வேர்வைக்கு மேலும் உறுதுணையாக இருந்து கைரேகை மறைந்து போக உழைத்து, திசையெங்கும் நெல், அரிசியை ரயில் மூலம் கொண்டு சேர்க்கும் ரயில்வே கூட்ஸ்ஷேட் தொழிலாளர்கள்.
நெல் உற்பத்தியில் முக்கிய மாவட்டமான தஞ்சாவூரிலிருந்து எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் இவர்களின் மூட்டை தூக்கும் ஊக்கினால் நிச்சயம் துளையிடப்பட்டே செல்லும்.
நெல் உற்பத்தியில் முக்கிய மாவட்டமான தஞ்சாவூரிலிருந்து எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் இவர்களின் மூட்டை தூக்கும் ஊக்கினால் நிச்சயம் துளையிடப்பட்டே செல்லும்.
வெயில், மழை, பனி, இரவு, பகல் என்று பாராது வேலை செய்து கொண்டே இருக்கும் மூட்டை தூக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், லட்சக்கணக்கான வியர்வைத் துளிகளோடு நெற்களஞ்சியத்திலிருந்து மற்ற பகுதிக்கு நெல்லை பயணிக்க வைக்கும் நிகழ்வோடு கலந்த காட்சிகள் நிறைந்த புகைப்படத் தொகுப்பு.
வெயில், மழை, பனி, இரவு, பகல் என்று பாராது வேலை செய்து கொண்டே இருக்கும் மூட்டை தூக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், லட்சக்கணக்கான வியர்வைத் துளிகளோடு நெற்களஞ்சியத்திலிருந்து மற்ற பகுதிக்கு நெல்லை பயணிக்க வைக்கும் நிகழ்வோடு கலந்த காட்சிகள் நிறைந்த புகைப்படத் தொகுப்பு.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in