பேசும் படங்கள்... (21.01.2021)

பேசும் படங்கள்... (21.01.2021)
Published on
பல ஆண்டுகளாக துப்புரவுப் பணிசெய்து வேலைநீக்கம் செய்யப்பட்ட  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு... மீண்டும் வேலை வழங்கக் கோரியும், தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியை கண்டித்தும்... சென்னை மாநகராட்சி செங்கொடிச் சங்கம் (CITU ) சார்பாக...  இன்று 21.1.2021)   சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள்  சவுந்தரராஜன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 படங்கள்: ம.பிரபு
பல ஆண்டுகளாக துப்புரவுப் பணிசெய்து வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு... மீண்டும் வேலை வழங்கக் கோரியும், தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியை கண்டித்தும்... சென்னை மாநகராட்சி செங்கொடிச் சங்கம் (CITU ) சார்பாக... இன்று 21.1.2021) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் சவுந்தரராஜன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு
விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... மாநில  உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்... சென்னை -  வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.
 படம்:  ம.பிரபு
விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்... மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்... சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ம.பிரபு
புதுச்சேரி அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (21.1.2021)  பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு  கண்டன பேரணியாகச் சென்று  புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட  முயன்றனர்.
படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (21.1.2021) பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கண்டன பேரணியாகச் சென்று புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். படம்: எம்.சாம்ராஜ்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு,  கண்டன பேரணியாகச் சென்று  இன்று (21.1.2021)புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட  முயன்ற புதுச்சேரி அரசு ஊழியர்களை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
படங்கள்: எம்.சாம்ராஜ்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, கண்டன பேரணியாகச் சென்று இன்று (21.1.2021)புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற புதுச்சேரி அரசு ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி நகரப் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.  ஆனால் இன்றும் (21.1.2021) சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்கே த துப்பாக்கி ஏந்திய பாதுபாப்பு  படையினர் பணியிலிருந்தனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி நகரப் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். ஆனால் இன்றும் (21.1.2021) சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்கே த துப்பாக்கி ஏந்திய பாதுபாப்பு படையினர் பணியிலிருந்தனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை இயற்றக் கோரி...  புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு  ரவிக்குமார்  எம்பி தலைமையில் இன்று (21.1.2021)விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  ஆர்பாட்டம்  நடைபெற்றது.
படம்: எம்.சாம்ராஜ்
மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை இயற்றக் கோரி... புதுச்சேரி சுதேசி பஞ்சாலையின் முன்பு ரவிக்குமார் எம்பி தலைமையில் இன்று (21.1.2021)விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி அப்பா பைத்திய சாமி குருபூஜையை முன்னிட்டு... இன்று (21.1.2021) சிறப்பு பூஜை நடத்திய  புதுச்சேரி - முன்னாள் முதல்வர்  ரெங்கசாமி 

 படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி அப்பா பைத்திய சாமி குருபூஜையை முன்னிட்டு... இன்று (21.1.2021) சிறப்பு பூஜை நடத்திய புதுச்சேரி - முன்னாள் முதல்வர் ரெங்கசாமி படங்கள்: எம்.சாம்ராஜ்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டில் தவறாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட  போனஸ் தொகைத் தொடர்பாக...  சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள   தொழிலாளர் நல ஆணையர்  அலுவலகத்தில்  போக்குவரத்து  தொழிற்சங்கத்தினர்  தொழிலாளர் நல இணை  ஆணையர் லட்சுமிகாந்தனுடன்  இன்று (21.12021)  பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். 
படம்:  க.ஸ்ரீபரத்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டில் தவறாக கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட போனஸ் தொகைத் தொடர்பாக... சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நல இணை ஆணையர் லட்சுமிகாந்தனுடன் இன்று (21.12021) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்
சென்னை -  தேனாம்பேட்டையில் உள்ள  டி.எம்.எஸ் வளாகத்தில்... பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (21.12021)  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 படங்கள்: க.ஸ்ரீபரத்
சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில்... பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (21.12021) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
சென்னை - சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில்   கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச  ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ...  இன்று (21.1.2021) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
சென்னை - சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ... இன்று (21.1.2021) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
வரும்  ஜனவரி  26-ம்  தேதி குடியரசு  தினக் கொண்டாட்டத்தையொட்டி...  சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையை சுத்தம்  செய்யும் பணியில்  ஊழியர்கள் இன்று (21.1.2021) ஈடுபட்டனர்.
 படம்:  க.ஸ்ரீபரத்
வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி... சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று (21.1.2021) ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்
வரும்  ஜனவரி  26-ம்  தேதி குடியரசு  தினக் கொண்டாட்டத்தையொட்டி...  சென்னை  மெரினா காமராஜர்  சாலையில்  உள்ள  காந்தி  சிலை  அருகில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி இன்று (21.1.2021) மும்முரமாக நடைபெற்றது.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி... சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி இன்று (21.1.2021) மும்முரமாக நடைபெற்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்
மத்திய   அரசு  சார்பில்  நீர்வாழ்   உயிரினங்கள்  தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் குறித்த ஆய்வகம் அமைத்தல் தொடர்பாக தாம்பரத்தை  அடுத்த படப்பையில் இன்று (21.1.2021)  அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.  இதில் - மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ்சிங்  தொடங்கி வைத்தார். அருகில் - தமிழக மீன்வளத் துறை அமைச்சர்   ஜெயக்குமார், மத்திய மீன்வளத் துறைச் செயலர்,  ராஜீவ் ரஞ்சன்,  தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கோபால் கலந்து கொண்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
மத்திய அரசு சார்பில் நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் குறித்த ஆய்வகம் அமைத்தல் தொடர்பாக தாம்பரத்தை அடுத்த படப்பையில் இன்று (21.1.2021) அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் - மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ்சிங் தொடங்கி வைத்தார். அருகில் - தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளத் துறைச் செயலர், ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கோபால் கலந்து கொண்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
சென்னை  - அடையாறு செயின்ட் லூயிஸ் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல்  பதிவு செய்யும் சிறப்பு முகாம்  இன்று (21.1.2021) நடைபெற்றது.

படங்கள்: பு.க.பிரவீன்
சென்னை - அடையாறு செயின்ட் லூயிஸ் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (21.1.2021) நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்
சென்னை -  வேளச்சேரி காந்தி சாலையில் சென்னை - தெற்கு திமுக மாவட்டச் செயலர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ’ வேளச்சேரியா...  வெள்ளச்சேரியா’  என்ற தலைப்பில் இன்று (21.1.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
சென்னை - வேளச்சேரி காந்தி சாலையில் சென்னை - தெற்கு திமுக மாவட்டச் செயலர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ’ வேளச்சேரியா... வெள்ளச்சேரியா’ என்ற தலைப்பில் இன்று (21.1.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி...  இன்று (21.1.2021)  தாம்பரம் பகுதியில்  ஏராளமான அளவில்   திரண்டிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில்  தேர்தல் பிரச்சாரம் செய்தார். 
படங்கள்: எம்.முத்துகணேஷ்
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி... இன்று (21.1.2021) தாம்பரம் பகுதியில் ஏராளமான அளவில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். படங்கள்: எம்.முத்துகணேஷ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in