அக்னி வெயில் காரணமாக மதுரை மாநகராட்சி மூலம் வடக்கு வெளி வீதி மற்றும் மேலமடை சந்திப்பில் வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி மூலம் சாலையில் போடப்பட்டுள்ள பந்தல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோடை வெயிலின் காரணமாக மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ரூபாய் 350 முதல் விற்கப்படும் மண் பானைகள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
நெல்லை மாவட்டம் சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றின் நடுவில் வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகள் குடைகள் போல் இருந்ததால், வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட பசுமாடுகள் அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. | படம்: மு.லக்ஷ்மி அருண்.
நுங்கு வண்டியை வைத்து விளையாடும் சிறுவர்கள். | இடம்: மதுரை | படம்: ஜி.மூர்த்தி
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்