புதுவித கொலு பொம்மைகள் முதல் சந்தனக்கூடு நல்லிணக்க விழா வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.4, 2023

புதுவித கொலு பொம்மைகள் முதல் சந்தனக்கூடு நல்லிணக்க விழா வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.4, 2023
Published on
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ரேக்ளா ரேஸ் நடைபெற இருப்பதால் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பயிற்சி பெறும் நாட்டின குதிரைகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ரேக்ளா ரேஸ் நடைபெற இருப்பதால் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பயிற்சி பெறும் நாட்டின குதிரைகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேல வாசல் பகுதியில் குடிநீர் தொட்டியில் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களில் இல்லாமல் பணியாற்றுகிறார்கள்.|  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேல வாசல் பகுதியில் குடிநீர் தொட்டியில் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களில் இல்லாமல் பணியாற்றுகிறார்கள்.| படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
நவராத்திரி ஆரம்பமாக சில தினங்களில் உள்ள நிலையில், மதுரை விளாச்சேரி பகுதியில் புதிதாக தயாரிக்கப்படும் அஷ்டவராகி, அஷ்டபைரவர், அஷ்ட பாலகர்கள் எட்டு திசை தெய்வங்கள், உலக கோப்பை கிரிக்கெட் பொம்மைகள், கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
நவராத்திரி ஆரம்பமாக சில தினங்களில் உள்ள நிலையில், மதுரை விளாச்சேரி பகுதியில் புதிதாக தயாரிக்கப்படும் அஷ்டவராகி, அஷ்டபைரவர், அஷ்ட பாலகர்கள் எட்டு திசை தெய்வங்கள், உலக கோப்பை கிரிக்கெட் பொம்மைகள், கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவித்தொகை பெறுவதற்கான நேர்முகத் தேர்வு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திரளான மாற்றுத்திறனாளிகள் தனது பராமரிப்பாளர்களுடன் வந்திருந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் உதவித்தொகை பெறுவதற்கான நேர்முகத் தேர்வு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திரளான மாற்றுத்திறனாளிகள் தனது பராமரிப்பாளர்களுடன் வந்திருந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்டம் நஞ்சுக்கொண்டாபுரம் கிராமத்திலிருந்து நாகநதி கூட்டுச்சாலை வரும் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க கோரி மனு அளித்த பலனில்லை.  நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அரசு பேருந்தை சிறை பிடித்து போராடிய கிராம மக்கள்.  பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ குளிக்க போராட்டக்காரர். | படங்கள்:வி.எம்.மணிநாதன்
வேலூர் மாவட்டம் நஞ்சுக்கொண்டாபுரம் கிராமத்திலிருந்து நாகநதி கூட்டுச்சாலை வரும் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க கோரி மனு அளித்த பலனில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அரசு பேருந்தை சிறை பிடித்து போராடிய கிராம மக்கள். பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ குளிக்க போராட்டக்காரர். | படங்கள்:வி.எம்.மணிநாதன்
வேலூர் தலைமை தபால் நிலையம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர். |  படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் தலைமை தபால் நிலையம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
பள்ளி கல்வி துறை - ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கோவை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலா உற்சவ  நிகழ்ச்சிகள். களிமண்ணால் மயில் பொம்மை லிங்கம்  உருவாக்கும் மாணவ மாணவியர்கள் |  படங்கள்: ஜெ.மனோகரன்
பள்ளி கல்வி துறை - ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கோவை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலா உற்சவ  நிகழ்ச்சிகள். களிமண்ணால் மயில் பொம்மை லிங்கம்  உருவாக்கும் மாணவ மாணவியர்கள் |  படங்கள்: ஜெ.மனோகரன்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  54-வது வார்டு தேசிய ஹாஸ்டல் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட போது குடிநீர் பைப் பல இடங்களில் உடைந்தது. இதனை 10 மேற்பட்ட முறை சீர் செய்தவர்கள் சரியான முறையில் செய்யாததால் அங்கு குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது .  இதனை கவனித்து நடவடிக்கை எடுக்காமல் சாலை அமைக்க ஜல்லி கற்களை‌ போட்டு நிரப்பி வருகின்றனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டு தேசிய ஹாஸ்டல் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட போது குடிநீர் பைப் பல இடங்களில் உடைந்தது. இதனை 10 மேற்பட்ட முறை சீர் செய்தவர்கள் சரியான முறையில் செய்யாததால் அங்கு குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது . இதனை கவனித்து நடவடிக்கை எடுக்காமல் சாலை அமைக்க ஜல்லி கற்களை‌ போட்டு நிரப்பி வருகின்றனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
புதுச்சேரியில் காமாட்சியம்மன் ஆலய சொத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க்கமுயன்ற பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. |  படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் காமாட்சியம்மன் ஆலய சொத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க்கமுயன்ற பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி விபத்துக்கான  இழப்பீட்டு தொகை வழங்காத காப்பீடு நிறுவனத்தை ஜப்தி செய்யும் வழங்கறிஞர்.| படம்.எம்.சாம்ராஜ்
புதுச்சேரி விபத்துக்கான இழப்பீட்டு தொகை வழங்காத காப்பீடு நிறுவனத்தை ஜப்தி செய்யும் வழங்கறிஞர்.| படம்.எம்.சாம்ராஜ்
மதுரை - நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பறக்கும் பாலத்தின் 192 தூண்களிலும் மதுரை மற்றும் தமிழின் சிறப்புகளை விளக்கும் படங்கள் வைப்பதற்காக ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பணிகள் நடைபெறவில்லை.|  படங்கள்: நா.தங்கரத்தினம்.
மதுரை - நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பறக்கும் பாலத்தின் 192 தூண்களிலும் மதுரை மற்றும் தமிழின் சிறப்புகளை விளக்கும் படங்கள் வைப்பதற்காக ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பணிகள் நடைபெறவில்லை.| படங்கள்: நா.தங்கரத்தினம்.
மதுரை ஒத்தகடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை தாங்களே உருவாக்கி  மதுரை மேலூர் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமையான மதுரையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி மாணவிகள். | படம்: நா. தங்கரத்தினம்.
மதுரை ஒத்தகடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை தாங்களே உருவாக்கி மதுரை மேலூர் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமையான மதுரையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி மாணவிகள். | படம்: நா. தங்கரத்தினம்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இரவு நடைபெற்ற உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழாவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு. |  படம்: நா. தங்கரத்தினம்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இரவு நடைபெற்ற உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழாவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு. | படம்: நா. தங்கரத்தினம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in