ஆசிரியர்கள் போராட்டம் முதல் சென்னை கனமழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.29, 2023

ஆசிரியர்கள் போராட்டம் முதல் சென்னை கனமழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.29, 2023
Published on
மகாத்மா காந்தியின் 154 ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மகாத்மா காந்தியின் 154 ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.  |  படங்கள்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
மதுரை ராஜ்ய முத்தையா மன்ற வளாகத்தில் உத்சவு கிராஃப்ட் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. | படங்கள்:எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை ராஜ்ய முத்தையா மன்ற வளாகத்தில் உத்சவு கிராஃப்ட் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. | படங்கள்:எஸ். கிருஷ்ணமூர்த்தி
வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ்த்துறைத் சார்பில் நடைபெற்ற எழுத்தாளர் பவா செல்லதுரையின்  சொல்வழிப் பயணம் நூலின் அறிமுக விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்.|  படங்கள்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் ஊரீசு கல்லூரி தமிழ்த்துறைத் சார்பில் நடைபெற்ற எழுத்தாளர் பவா செல்லதுரையின் சொல்வழிப் பயணம் நூலின் அறிமுக விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்.| படங்கள்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கஸ்பா பகுதி கானார் தெருவில் கான்கிரீட் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்நிலையில், தெருவில் பாதிக்கும் மேற்பட்டு கான்கிரீட் சாலை போடப்பட்டு மீதமுள்ள பகுதியை போடாமல் விடப்பட்டுள்ளதால் அங்கு குண்டும், குழியுமாகவும், மழை நாட்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் கஸ்பா பகுதி கானார் தெருவில் கான்கிரீட் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்நிலையில், தெருவில் பாதிக்கும் மேற்பட்டு கான்கிரீட் சாலை போடப்பட்டு மீதமுள்ள பகுதியை போடாமல் விடப்பட்டுள்ளதால் அங்கு குண்டும், குழியுமாகவும், மழை நாட்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சியும் கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சியும் கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
அந்தி பொழுதில் வானில் ஆதவன் தூரிகை தீட்டிய வர்ண ஜாலம். |  இடம். வேலூர் கிரீன் கிரீன் சர்க்கிள். | படம்: வி.எம்.மணிநாதன்.
அந்தி பொழுதில் வானில் ஆதவன் தூரிகை தீட்டிய வர்ண ஜாலம். | இடம். வேலூர் கிரீன் கிரீன் சர்க்கிள். | படம்: வி.எம்.மணிநாதன்.
டிஆர்இயூ மற்றும் சிஐடியு சங்கம் சார்பாக 2022-23 நிதியாண்டில் ரயில்வே துறையில் ஒட்டுமொத்த வருவாய் 2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது .அதற்கு இணையாக போனஸ் நாட்களை உயர்த்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து மதுரை மேற்கு நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
டிஆர்இயூ மற்றும் சிஐடியு சங்கம் சார்பாக 2022-23 நிதியாண்டில் ரயில்வே துறையில் ஒட்டுமொத்த வருவாய் 2.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது .அதற்கு இணையாக போனஸ் நாட்களை உயர்த்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து மதுரை மேற்கு நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி  தலைமையில் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி சென்டாக் தொழிற்கல்வி மாணவர்களுக்கான இ்டஓதுக்கீடு கலந்தாய்வு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் மையத்தில் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி சென்டாக் தொழிற்கல்வி மாணவர்களுக்கான இ்டஓதுக்கீடு கலந்தாய்வு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் மையத்தில் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே சுமார் 5 அடி ஆழம் உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அரசு பள்ளி அருகில் உள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிமாக செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே சுமார் 5 அடி ஆழம் உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அரசு பள்ளி அருகில் உள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிமாக செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்.
சமவேலைக்கு சமஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பழைய டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளான இன்று 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். | படம்: ம.பிரபு
சமவேலைக்கு சமஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பழைய டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளான இன்று 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். | படம்: ம.பிரபு
சென்னை தி. நகர் நாயர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.| படம்:எஸ். சத்தியசீலன்
சென்னை தி. நகர் நாயர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.| படம்:எஸ். சத்தியசீலன்
புரட்டாசி மாத பௌர்ணமி பிரம்மபுத்திரத்தை முன்னிட்டு மதுரை  கூடல்ழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருடாழ்வார் சேர்வை நடைபெற்றது. இதில்  பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
புரட்டாசி மாத பௌர்ணமி பிரம்மபுத்திரத்தை முன்னிட்டு மதுரை கூடல்ழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருடாழ்வார் சேர்வை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கனமழை, பலத்த காற்று வீசியதால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துள்ளானது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
கனமழை, பலத்த காற்று வீசியதால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துள்ளானது. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னையில் இன்று மாலை வெளுத்து வாங்கிய கனமழை. | படங்கள்: ஸ்ரீநாத்
சென்னையில் இன்று மாலை வெளுத்து வாங்கிய கனமழை. | படங்கள்: ஸ்ரீநாத்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in