முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தின் கேலரி மேற்கூரை ரூ.15 கோடியில், 8 மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தப்பணிகள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.