அரங்கில் பரிமாறப்பட்ட தேநீர், குளிர்பானம் (சர்பத்), இட்லி, தோசை, பரோட்டா, பிரியாணி மற்றும் வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு கொரிய மக்கள் உட்பட பன்னாட்டு சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அரங்கத்தை சங்கத்தின் கலை பண்பாட்டு அணியைச் சேர்ந்த வைஷ்ணவி, லட்சுமி பிரியா, விவேகானந்தன், அபர்ணா, புவனா, விஷ்ணு உள்ளிட்டோர் அமைத்து வழிநடத்தினர். தேவையான ஓவியங்களை விபின், ஜஜியோ, விவேக் ஆகியோர் வரைய, முத்துசாமி ஆனந்த் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆகியவற்றை செய்தார்.