
இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது ‘டிட்வா’ புயல்.
இந்தப் பெருமழை காரணமாக, இலங்கையின் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின.
கெலனி ஆற்று வெள்ளப் பெருக்கால் கொழும்புவின் வடக்குப் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.
டிச.1 வரை பலி 300-ஐ கடந்தது; 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தொலைத் தொடர்புச் சேவைகள் பாதித்துள்ளன.
24,000+ மீட்புப் படையினர் இரவு பகலாக மக்களை மீட்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் இருப்பது மீட்புப் பணிகளுக்கு சவாலாக உள்ளது.