கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட் விபத்து துயரம் - போட்டோ ஸ்டோரி

Cuddalore Train School Bus Accident - Photo Story
Cuddalore Train School Bus Accident - Photo Story
Published on
<p>கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | படங்கள்: <strong>எம்.சாம்ராஜ்</strong></p>

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | படங்கள்: எம்.சாம்ராஜ்

<p>கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை 8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.</p>

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை 8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

<p>ரயில் மோதியபோது பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்து சுமார் 50 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p>

ரயில் மோதியபோது பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்து சுமார் 50 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

<p>படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். </p>

படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

<p>படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் (15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p>

படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் (15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

<p>விபத்து நேர்ந்த இடத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த குழந்தைகளின் டிபன் பாக்ஸ் மற்றும் ஷூக்கள் சிதறி கிடந்தது காண்போரை கண்கலங்க வைத்தது. </p>

விபத்து நேர்ந்த இடத்தில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த குழந்தைகளின் டிபன் பாக்ஸ் மற்றும் ஷூக்கள் சிதறி கிடந்தது காண்போரை கண்கலங்க வைத்தது. 

<p>இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>

இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

<p>இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.</p>

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

<p>உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கத் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.</p>

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட்கீப்பர் பங்கத் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

<p>இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.</p>

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

<p>கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் விபத்து ஏற்பட்டது என்றும், ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தூங்கிவிட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். </p>

கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் விபத்து ஏற்பட்டது என்றும், ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் தூங்கிவிட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்று பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். 

<p>இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.</p>

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

<p>இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்று தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு...</p>

இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்று தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு...

<p>கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 4 மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம் கடலூர் - ஆலப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 170 எண் கொண்ட ரயில்வே லெவல் கிராசிங் கேட் கடக்க முயன்றபோது, ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது. </p>

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 4 மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம் கடலூர் - ஆலப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 170 எண் கொண்ட ரயில்வே லெவல் கிராசிங் கேட் கடக்க முயன்றபோது, ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது. 

<p>அதாவது, விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில், லெவல் கிராசிங் கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவர், ஓட்டுநர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.<br />
 </p>

அதாவது, விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில், லெவல் கிராசிங் கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவர், ஓட்டுநர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
 

<p>இந்தச் சம்பவ இடத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். <br />
 </p>

இந்தச் சம்பவ இடத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
 

<p>இந்த விபத்தில் உயர்மட்ட மின்பாதையில் சேதமடைந்துள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். <br />
 </p>

இந்த விபத்தில் உயர்மட்ட மின்பாதையில் சேதமடைந்துள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 

<p>முதற்கட்ட விசாரணையில், வேன் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது, இருப்பினும் பள்ளியை அடைவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேன் கேட்டைக் கடக்க அனுமதிக்குமாறு வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். இது கேட் கீப்பரால் தவறாக அனுமதிக்கப்பட்டது. அதாவது, விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது.</p>

முதற்கட்ட விசாரணையில், வேன் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது, இருப்பினும் பள்ளியை அடைவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேன் கேட்டைக் கடக்க அனுமதிக்குமாறு வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். இது கேட் கீப்பரால் தவறாக அனுமதிக்கப்பட்டது. அதாவது, விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

<p>விதிகளின்படி, கேட் கீப்பர் கேட்டைத் திறந்திருக்க முடியாது. எனவே, கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குற்றவியல் அலட்சியத்துக்காக அவர் மீது வழக்குப் பதிந்து,கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.<br />
 </p>

விதிகளின்படி, கேட் கீப்பர் கேட்டைத் திறந்திருக்க முடியாது. எனவே, கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குற்றவியல் அலட்சியத்துக்காக அவர் மீது வழக்குப் பதிந்து,கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

<p>இந்த லெவல் கிராசிங் கேட்டில் தெற்கு ரயில்வேயால் முழு ரயில்வே நிதியுதவியுடன் ஒரு சுரங்கப் பாதைக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. <br />
 </p>

இந்த லெவல் கிராசிங் கேட்டில் தெற்கு ரயில்வேயால் முழு ரயில்வே நிதியுதவியுடன் ஒரு சுரங்கப் பாதைக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. 
 

<p><br />
விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்பு மற்றும் நபர்களுக்கு காயம் ஏற்பட்டதற்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.<br />
 </p>


விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்பு மற்றும் நபர்களுக்கு காயம் ஏற்பட்டதற்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
 

<p><br />
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் செவ்வாய்க்கிழமை ரயில்வே மூலமாக வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.</p>


இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் செவ்வாய்க்கிழமை ரயில்வே மூலமாக வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

<p>மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பெருந்துயருடன் பொதுமக்கள் கூடினர். 3 மாணவர்களின் உறவினர்கள், சக பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் வெளியே கதறி அழுதனர்.</p>

மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பெருந்துயருடன் பொதுமக்கள் கூடினர். 3 மாணவர்களின் உறவினர்கள், சக பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் வெளியே கதறி அழுதனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in