
வேளச்சேரி ஏ.ஜி.எஸ் காலனியில் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். | படங்கள்: ம.பிரபு, எஸ்.சத்தியசீலன் |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. ஒருநாள் மழைக்கே சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. போக்குவரத்து நெரிசல், படகில் மீட்பு பணி, மின்தடை என மழை - வெள்ள சவால்கள் ஆரம்பத்திலேயே தொடங்க, அதை சமாளிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.
கோயம்பேடு பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதி.
ராயப்பேட்டை ஜி.பி.சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் தவறி விழுந்த வாகன ஓட்டி.
பட்டாளத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் மூதாட்டி.
மழையால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். | படங்கள்: ம.பிரபு, எஸ்.சத்தியசீலன் |
பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை.
ஓஎம்ஆர் சாலை கந்தன்சாவடி பகுதி.
மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை.
மூழ்கியுள்ள வியாசர்பாடி சுரங்கப் பாதை.
மழை பாதிப்புக்கு அஞ்சி வேளச்சேரி 100 அடி சாலை மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் நிறுத்தப்பட்டுள்ள படகு, டிராக்டர்கள். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
பட்டாளம் பகுதியில் கடையை சூழ்ந்துள்ள மழைநீர்.
எம்எம்டிஏ மெட்ரோ ரயில் நிலையம் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்.
மூடப்பட்ட எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப் பாதை.
ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை.
புளியந்தோப்பு - பெரம்பூர் சாலை