தொடங்கியது பிளஸ் 2 பொதுத் தேர்வு - போட்டோ ஸ்டோரி by ஜெ.மனோகரன்

12th Public Exam Photo Story
12th Public Exam Photo Story
Published on
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கியது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கியது.
மார்ச் 22-ம் தேதி நடைபெற பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் நாளான இன்று (மார்ச் 1) தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது.
மார்ச் 22-ம் தேதி நடைபெற பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் நாளான இன்று (மார்ச் 1) தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது.
7,534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள், 21,875 தனித் தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.94 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
7,534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள், 21,875 தனித் தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.94 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,335 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,335 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது.
ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது.
அவ்வாறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது, விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
அவ்வாறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது, விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in