விஜயகாந்த் உடல் எடுத்துவரப்பட்ட வாகனத்தின் முன்பாக கண்ணீர்விட்டு அழதபடி அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் வந்தனர். வழிநெடுகிலும் விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிகவினர், கட்சித் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.