தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேவையான ஆட்கள், இயந்திரங்கள் மூலம் எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கசிவைஅகற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெய் உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.