தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. | படங்கள்: எம்.முத்துகணேஷ்
தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்ரா நகர் பகுதியில் கால் முறிந்த பாட்டி ஒருவரை மீட்டு படகில் ஏரி சென்றனர். பிறந்த குழந்தைகளை படகில் ஏற்றி மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
மேற்கு தாம்பரம் ராகவேந்திரா நகரில் கட்டியுள்ள குடியிருப்பை சுற்றி கண்ணுக்கெட்டியவரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் இன்னும் மக்கள் குடியிருப்பது குறிப்பிடதக்கது.
சிடிஒ காலனி பகுதியில் மாடிகளிலிருந்து உதவி கேட்கும் மக்கள்..
தாம்பரம் சிடிஒ காலனி, ராகவேந்திரா நகர், குட்வில் நகர், எப்.ஐ.சி நகர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் குடியிருப்பவர்கள் படகு போக்குவரத்து மூலம் வெளியேறினர்.
வெள்ளத்தில் சிக்கியவர்கள் 2 நாட்களுக்குப் பிறகு குடும்பங்களுடன் வெளியேறினர்.
தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் 2 நாட்களாக வெள்ளம் வடியாததால் மக்கள் கூண்டோடு குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகிலும் நடந்தும் வெளியேறினர்.
செம்பரம்பாக்கம் மற்றும் பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் நீர் அடையாற்றில் கலந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியவாறு செல்லும் வெள்ளம்.
இடம்: தாம்பரம் - முடிச்சூர் பகுதி
முடிச்சூர் சர்விஸ் சாலையில் மாநகரட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.