41 தொழிலாளர்களை மீட்கும் இறுதிகட்ட பணிகள் @ உத்தராகண்ட் | போட்டோ ஸ்டோரி

41 தொழிலாளர்களை மீட்கும் இறுதிகட்ட பணிகள் @ உத்தராகண்ட் | போட்டோ ஸ்டோரி
Published on
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான இறுதிக் கட்ட பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது. | படங்கள்: சஷி சேகர் காஷ்யப்
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான இறுதிக் கட்ட பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது. | படங்கள்: சஷி சேகர் காஷ்யப்
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை சுரங்கத்தில் மண் சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை சுரங்கத்தில் மண் சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை மூடியிருக்கிறது. உட்பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை மூடியிருக்கிறது. உட்பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
மத்திய, மாநில அரசுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 19 அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 19 அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சிமேற்கொள்ளப்பட்டது. ஆனால், மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சிமேற்கொள்ளப்பட்டது. ஆனால், மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
அதன்பிறகு டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது.
அதன்பிறகு டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது.
கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு இயந்திரங்கள் பழுதான நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆகர் இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது.
கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு இயந்திரங்கள் பழுதான நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆகர் இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது.
எனினும், ஆகர் இயந்திரம் அடிக்கடி பழுதாகி மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எனினும், ஆகர் இயந்திரம் அடிக்கடி பழுதாகி மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து 7 நிபுணர்கள் ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டு அமெரிக்க இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது. அந்த நிபுணர்கள் அங்கேயே முகாமிட்டு இயந்திரம் பழுதாகாமல் பராமரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து 7 நிபுணர்கள் ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டு அமெரிக்க இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது. அந்த நிபுணர்கள் அங்கேயே முகாமிட்டு இயந்திரம் பழுதாகாமல் பராமரித்து வருகின்றனர்.
மீட்புப் பணி செயல் விளக்கம்: துளையிடும் பணி முடிந்து இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள், குழாய் வழியாக சுரங்கப் பாதைக்குள் சென்று 41 தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான செயல்விளக்கத்தை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நேற்று நிகழ்த்தி காட்டினர்.
மீட்புப் பணி செயல் விளக்கம்: துளையிடும் பணி முடிந்து இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகு, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள், குழாய் வழியாக சுரங்கப் பாதைக்குள் சென்று 41 தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான செயல்விளக்கத்தை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நேற்று நிகழ்த்தி காட்டினர்.
அந்த படை வட்டாரங்கள் கூறியதாவது: இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய்களை செலுத்த வேண்டி உள்ளது.
அந்த படை வட்டாரங்கள் கூறியதாவது: இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய்களை செலுத்த வேண்டி உள்ளது.
தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதி வரை குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகு எங்களது படையை சேர்ந்த 15 வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், காஸ் வெல்டிங் கட்டர் இயந்திரங்களுடன் குழாய் வழியாக தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு செல்வார்கள். எங்களோடு மருத்துவர் ஒருவரும் உடன் வருவார்.
தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதி வரை குழாய்கள் பொருத்தப்பட்ட பிறகு எங்களது படையை சேர்ந்த 15 வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், காஸ் வெல்டிங் கட்டர் இயந்திரங்களுடன் குழாய் வழியாக தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு செல்வார்கள். எங்களோடு மருத்துவர் ஒருவரும் உடன் வருவார்.
சுமார் இரு வாரங்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படும். ஆரோக்கியமானநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் குழாய் பாதை வழியாக ஊர்ந்து வெளியேறுவார்கள்.
சுமார் இரு வாரங்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படும். ஆரோக்கியமானநிலையில் இருக்கும் தொழிலாளர்கள் குழாய் பாதை வழியாக ஊர்ந்து வெளியேறுவார்கள்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்காக சிறப்பு டிராலியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த டிராலியில் தொழிலாளர்களை படுக்க வைத்து சுரங்கத்தின் வெளியில் இருந்து கயிறுமூலம் டிராலியை இழுத்து தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்காக சிறப்பு டிராலியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த டிராலியில் தொழிலாளர்களை படுக்க வைத்து சுரங்கத்தின் வெளியில் இருந்து கயிறுமூலம் டிராலியை இழுத்து தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள். இவ்வாறு தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மன அழுத்தத்தை போக்க செஸ் அட்டை: மீட்புப் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் ரோஹித் கூறியதாவது: சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மன அழுத்தத்தை போக்க செஸ் அட்டை: மீட்புப் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் ரோஹித் கூறியதாவது: சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க ரம்மி, லூடோ, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பி உள்ளோம். இந்த விளையாட்டுகளை தொழிலாளர்கள் விளையாடி பொழுதை போக்கினால் அவர்களது மனஅழுத்தம் குறையும்.
அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க ரம்மி, லூடோ, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பி உள்ளோம். இந்த விளையாட்டுகளை தொழிலாளர்கள் விளையாடி பொழுதை போக்கினால் அவர்களது மனஅழுத்தம் குறையும்.
அதோடு வாக்கி டாக்கி வாயிலாக உறவினர்களிடம் தொழிலாளர்கள் பேசி வருகின்றனர். மனநல மருத்துவர்களும் தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அதோடு வாக்கி டாக்கி வாயிலாக உறவினர்களிடம் தொழிலாளர்கள் பேசி வருகின்றனர். மனநல மருத்துவர்களும் தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அவர்களின் மன உறுதியை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு மருத்துவர் ரோஹித் தெரிவித்துள்ளார்.
அவர்களின் மன உறுதியை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு மருத்துவர் ரோஹித் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நிலவரம்: 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க இன்னும் 10-12 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை நிலவரம்: 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க இன்னும் 10-12 மீட்டர் துளையிடும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்துவிட்டதால், இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்துவிட்டதால், இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத் திட்டமாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து குடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திட்டமாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து குடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உரிய ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உரிய ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும்போது எந்த தவறும் ஏற்படாமல் இருக்க திறமையான மருத்துவர்களின் குழு அங்கேயே தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும்போது எந்த தவறும் ஏற்படாமல் இருக்க திறமையான மருத்துவர்களின் குழு அங்கேயே தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தை விசாரித்த விசாரணைக் குழு, சுரங்கப்பாதையில் அவசரகால வெளியேற்றம் இல்லை (emergency exit) என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தை விசாரித்த விசாரணைக் குழு, சுரங்கப்பாதையில் அவசரகால வெளியேற்றம் இல்லை (emergency exit) என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிகழ்விடத்துக்கு விரைந்துள்ளார்.
இதனிடையே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நிகழ்விடத்துக்கு விரைந்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் அவருக்கு விளக்கினர்.
சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இயந்திரம் மூலம் வழங்கப்பட்டது.
சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இயந்திரம் மூலம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரிக் தயாரிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் பரந்தாமன் மற்றும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சாலைப் பணிகள் மேற்கொள்ளும் மற்றொரு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களிடம் உள்ள சிடி-5 என்றநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி, உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் 6 அங்குலம் அளவுக்கு துளையிட்டு, சுரங்கப் பாதைக்குள் சிக்கியதொழிலாளர்களுக்கு உணவு, மருந்து மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரிக் தயாரிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் பரந்தாமன் மற்றும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சாலைப் பணிகள் மேற்கொள்ளும் மற்றொரு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களிடம் உள்ள சிடி-5 என்றநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி, உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் 6 அங்குலம் அளவுக்கு துளையிட்டு, சுரங்கப் பாதைக்குள் சிக்கியதொழிலாளர்களுக்கு உணவு, மருந்து மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
சுரங்கப் பாதையில் துளையிட‘சிமென்ட்ரி சிஸ்டம்’ என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளோம். வழக்கமாக நிலத்தில் துளையிட்ட பின்னர், கேஸ்டிங் பைப் பொருத்தப்படும். ஆனால் ‘சிமென்ட்ரி சிஸ்டத்தில்’ துளையிடும்போதே உடன்செல்லும் கேஸ்டிங் பைப், ட்ரில்லரை வெளியில் எடுக்கும்போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும்.
சுரங்கப் பாதையில் துளையிட‘சிமென்ட்ரி சிஸ்டம்’ என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளோம். வழக்கமாக நிலத்தில் துளையிட்ட பின்னர், கேஸ்டிங் பைப் பொருத்தப்படும். ஆனால் ‘சிமென்ட்ரி சிஸ்டத்தில்’ துளையிடும்போதே உடன்செல்லும் கேஸ்டிங் பைப், ட்ரில்லரை வெளியில் எடுக்கும்போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும்.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான், சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான், சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
யார் இந்த அர்னால்டு டிக்ஸ்? - உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் சம்பவ இடத்துக்கு வந்த பிறகே மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் பள்ளிக் கல்வி, ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்ற அர்னால்டு டிக்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான துறையில் கோலோச்சி வருகிறார். தற்போது அவர் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு அவர் ஆலோசகராக இருந்துள்ளார்.
யார் இந்த அர்னால்டு டிக்ஸ்? - உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் சம்பவ இடத்துக்கு வந்த பிறகே மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் பள்ளிக் கல்வி, ஆஸ்திரேலியாவில் புவியியல் என்ஜீனியரிங் கல்வி பயின்ற அர்னால்டு டிக்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான துறையில் கோலோச்சி வருகிறார். தற்போது அவர் சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு அவர் ஆலோசகராக இருந்துள்ளார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in