என்பிசிசி எனும் நிறுவனம் பாரத மண்டபத்தை கட்டி முடித்துள்ளது. தென் கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட ஐம்பது நாடுகளின் சர்வதேச அரங்குகளை பார்த்து அவற்றை விட சிறப்பாக இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரகதி மைதான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்குவோர் பாரத் மண்டபத்திற்கு நேரடியாக வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டண அறைகள், டிஜிட்டல் திரை, மின்விளக்கு நீரோட்டம் உள்ளிட்ட பல கண்கவரும் அம்சங்கள் இங்கு உள்ளன.