ஜப்பானின் ஹிரோஷிமாவில் பிரதமர் மோடி - கவனம் ஈர்த்த தருணங்கள் | போட்டோ ஸ்டோரி

ஜப்பானின் ஹிரோஷிமாவில் பிரதமர் மோடி - கவனம் ஈர்த்த தருணங்கள் | போட்டோ ஸ்டோரி
Published on
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது.
ஆயுத பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டின் முக்கிய நோக்கம்.
ஆயுத பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டின் முக்கிய நோக்கம்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி ஹிரோஷிமா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் மோடி கடந்த 19-ம் தேதி ஹிரோஷிமா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அணுகுண்டு தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட உலகின் முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிதான்.
அணுகுண்டு தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட உலகின் முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிதான்.
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது.
இந்த மாநாட்டில், சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அவர்களில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார். ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோக சங்கிலியில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை நீக்க வேண்டும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அவர்களில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார். ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோக சங்கிலியில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை நீக்க வேண்டும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜி-7 மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ‘‘ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் ஒரு அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவும் உதவி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறேன் என்று ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
ஜி-7 மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ‘‘ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் ஒரு அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவும் உதவி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறேன் என்று ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
ஜப்பான் பத்திரிகைகள் அனைத்திலும் பிரதமர் மோடி - அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு பற்றிய செய்திகள்தான் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமித்திருந்தன. இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தை, அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் அனைத்துக்கும் ஜப்பான் பத்திரிகைகள் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன.
ஜப்பான் பத்திரிகைகள் அனைத்திலும் பிரதமர் மோடி - அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு பற்றிய செய்திகள்தான் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமித்திருந்தன. இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தை, அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் அனைத்துக்கும் ஜப்பான் பத்திரிகைகள் முக்கியத்துவம் தந்து வெளியிட்டன.
ஹிரோஷிமாவின் அணுகுண்டு நினைவு சின்னத்துக்கு அருகில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
ஹிரோஷிமாவின் அணுகுண்டு நினைவு சின்னத்துக்கு அருகில் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டாலே உலகம் அச்சத்தில் உறைகிறது. இந்த நகரில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் காந்தியின் அகிம்சை கொள்கை முன்னெடுத்து செல்ல வேண்டும். காந்தியின் அமைதி, ஒற்றுமை கொள்கைகள் இன்றளவும் லட்சக்கணக்கான மக்களுக்கு மன உறுதியை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டாலே உலகம் அச்சத்தில் உறைகிறது. இந்த நகரில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் காந்தியின் அகிம்சை கொள்கை முன்னெடுத்து செல்ல வேண்டும். காந்தியின் அமைதி, ஒற்றுமை கொள்கைகள் இன்றளவும் லட்சக்கணக்கான மக்களுக்கு மன உறுதியை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார்.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த வீடியோ வைரலாக பரவியது.
அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த வீடியோ வைரலாக பரவியது.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 மாநாட்டை தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 மாநாட்டை தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, மோடியின் அருகே வந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். அடுத்த மாதம் அமெரிக்கா வரும் உங்களுக்கு வெள்ளை மாளிகையில் அரசு சார்பில் விருந்தளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதில் பங்கேற்க வேண்டும் என்று ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்களும் ஆசைப்படுகின்றனர்....
அப்போது, மோடியின் அருகே வந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். அடுத்த மாதம் அமெரிக்கா வரும் உங்களுக்கு வெள்ளை மாளிகையில் அரசு சார்பில் விருந்தளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதில் பங்கேற்க வேண்டும் என்று ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்களும் ஆசைப்படுகின்றனர்....
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள் என ஏராளமானோர் ‘டிக்கெட்’ கேட்கின்றனர். எத்தனை பேரைதான் நான் அழைப்பது? உங்களால் எனக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நான் கிண்டலடிப்பதாக நினைக்காதீர்கள். என் குழுவினரை கேட்டுப் பாருங்கள். அமெரிக்காவில் உங்களை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றார் பைடன்.
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள் என ஏராளமானோர் ‘டிக்கெட்’ கேட்கின்றனர். எத்தனை பேரைதான் நான் அழைப்பது? உங்களால் எனக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நான் கிண்டலடிப்பதாக நினைக்காதீர்கள். என் குழுவினரை கேட்டுப் பாருங்கள். அமெரிக்காவில் உங்களை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றார் பைடன்.
பிரதமர் மோடி புன்முறுவலுடன் பைடன் பேசியதை கேட்டபடி இருந்தார். உடனே, அருகில் இருந்த ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “அதே பிரச்சினை எனக்கும் உள்ளது. சிட்னியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். அங்கு 20 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க விரும்புகின்றனர்” என்றார்.
பிரதமர் மோடி புன்முறுவலுடன் பைடன் பேசியதை கேட்டபடி இருந்தார். உடனே, அருகில் இருந்த ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “அதே பிரச்சினை எனக்கும் உள்ளது. சிட்னியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். அங்கு 20 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க விரும்புகின்றனர்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிபர் ஜோ பைடன், மோடியிடம், “நீங்கள் பிரபலமாக இருக்கிறீர்கள். உங்களிடம் நான் கட்டாயம் ஆட்டோகிராப் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்
அப்போது குறுக்கிட்ட அதிபர் ஜோ பைடன், மோடியிடம், “நீங்கள் பிரபலமாக இருக்கிறீர்கள். உங்களிடம் நான் கட்டாயம் ஆட்டோகிராப் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in