இவ்விழாவின் மூலம் பக்தியும், பாரம்பரியமும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் அருகேயுள்ள ஸ்ரீ நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் பாகதவ மேளா நாட்டிய நாடகம் தொடங்கியது.