ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க ஸ்லோவேக்கியா பிரதமர் வலியுறுத்தல்

பிரதமர் மோடி மற்றும் ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ

பிரதமர் மோடி மற்றும் ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ

Updated on
2 min read

பிராடிஸ்​லாவா: ஐ.​நா. பாது​காப்பு கவுன்​சிலில் இந்தியா​வுக்கு நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும் என்று ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலி​யுறுத்தி உள்​ளார்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று முன்​தினம் இரவு ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்லாவா​வுக்கு சென்​றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் இரு​வரும் நிருபர்​களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர்.

அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: இந்​தி​யா, ஸ்லோவேக்​கியா இடையி​லான வர்த்தக உறவு வலு​வடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்​டில் ஸ்லோவேக்​கி​யா​வின் முதல் செயற்​கைக்​கோளை இந்​தியா விண்​ணில் செலுத்​தி​யது. இந்​திய விண்​வெளி துறை அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த துறை​யில் ஸ்லோவேக்​கிய நிறு​வனங்​கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்​கிறேன்.

இரு நாடு​கள் இடையே டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் தொடர்​பாக முக்கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இந்​திய தொழிலாளர்​கள் ஸ்லோவேக்​கி​யா​வில் பணி​யாற்​று​வது தொடர்பாக முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இரு நாடு​களும் அமை​தியை முன்​னிறுத்​துகின்​றன. அந்த வகை​யில் உலகத்​தின் அமை​திக்​காக நாங்​கள் ஒன்​றிணைந்து செயல்படுவோம். ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் இந்​தி​யா​வுக்கு வருகை தர வேண்​டும் என அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ கூறிய​தாவது: ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தில் ஸ்லோவேக்​கியா அங்​கம் வகிக்​கிறது. இந்​தி​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானதை நாங்​கள் முழு​மனதோடு வரவேற்றோம். இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெரு​மையை நரேந்​திர மோடி பெற்​றிருக்​கிறார். அவரது தேர்​தல் வெற்​றிகள், உலக அரசி​யல் அதிச​யம் ஆகும்.

செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில்​நுட்​பம், டிஜிட்​டல் ​மயத்தில் ஒட்​டுமொத்த உலகத்​துக்​கும் இந்​தியா முன்​னோடி​யாக விளங்​கு​கிறது. உலக பொருளா​தா​ரத்​தில் வளர்ந்த நாடு​களை​விட இந்​தியா அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இத்​தகைய சிறப்​புமிக்க இந்​தி​யா​வுக்கு ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

11 ஒப்பந்தம் கையெழுத்து

இந்த சந்திப்பின்போது, இந்​திய தொழிலா​ளர்​களை ஸ்லோவேக்கியா​வில் பணி​யமர்த்​து​வது, பாது​காப்பு துறை​யில் பரஸ்​பரம் ஒத்​துழைப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பங்​கள் பரிமாற்றம், உயர்​கல்​வி- ஆராய்ச்​சி​யில் ஒத்​துழைப்​பு, ஆடியோ-வீடியோ உரு​வாக்​கம், ஸ்லோவேக்​கி​யா​வின் கோசிஸ் பல்​கலைக்​கழகத்​தில் இந்​தி​யா​வின் சார்​பில் ஏஐ இருக்​கை, குவான்​டம் கம்​யூனிகேஷன், இயற்கை வைத்​தி​யம், இந்​திய- ஸ்லோவேக்​கிய பல்கலைக்​கழங்​கள் இடையே ஒத்​துழைப்​பு, சுற்​றுலா, அறி​வியல் ஆகியவை தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 11 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

மேலும் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இணைந்து செயல்பட உறு​தி​யேற்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக இரு நாடு​கள் இடையே சிறப்​பு செயல்​ குழு​வை அமைப்​பது உள்​ளிட்​ட​வை தொடர்​பாக 3 அறிவிப்புகளும்​ வெளியிடப்​பட்​டன.

வந்தே மாதரம் பாடலுடன் வரவேற்பு

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்லோவேக்கியா செல்வது இதுதான் முதல் முறை. அங்கு சென்ற மோடிக்கு, தலைநகர் பிராடிஸ்லாவாவில் பாரம்பரிய முறைப்படி ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரொட்டி என்பது செழிப்பையும், உப்பு என்பது மதிப்பு, பாதுகாப்பு மற்றும் நீடித்த நட்பைக் குறிப்பதால், ஸ்லோவேக்கியா வரும் விருந்தினர்களுக்கு ரொட்டி மற்றும் உப்புடன் வரவேற்பு அளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

ஸ்லோவேக்கியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ் பிளானர் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் உள்ளூர் கலைஞர்கள் வந்தே மாதரம் பாடல் பாடியும், நாட்டுப்புற நடனம் ஆடியும் வரவேற்றனர். இது பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்தது. ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரான்ஸ் செல்கிறார்.

100-வது வெளிநாட்டு பயணம்

கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019, 2024-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தல்களில் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

முதல் பதவிக் காலத்தில் அவர் 49 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். 2-வது பதவிக் காலத்தில் 27 வெளிநாடுகளுக்கு சென்றார். தற்போது 3-வது பதவிக் காலத்தில் ஸ்லோவேக்கியாவை சேர்த்து இதுவரை 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளார். ஒட்டு மொத்தமாக கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 100 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி மற்றும் ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ</p></div>
அமெரிக்கா - ஈரான் இடையே ஜூன் 19-ல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து: 2 மாதங்களாக நீடித்த இழுபறிக்கு முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in