சிட்னி தீவிரவாத தாக்குதல்: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

சிட்னி தீவிரவாத தாக்குதல்: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

Published on

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்​னி​யில் தீவிர​வாத தாக்​குதலில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது.

சிட்னி நகரின் போன்டி கடற்​கரை​யில் யூதர்​களின் வரு​டாந்​திர ஹனுக்கா திரு​விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. மாலை​யில் பெண்​கள், குழந்​தைகள் என நூற்​றுக்​கணக்​கான யூதர்​கள் கூடி​யிருந்​தனர். அப்​போது இரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு கண்​மூடித்​தன​மாக தாக்​குதல் நடத்​தினர். இதில் ஒரு தீவிரவாதி உட்பட 11 பேர் இறந்தனர்.

ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். ​இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்​தது. மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்ட சுமார் 40 பேரில் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர்.

தாக்​குதல் நடத்​தி​ய​வர்​கள் 50 வயது தந்தை மற்​றும் 24 வயது மகன் எனத் தெரிய​வந்​துள்​ளது. இதில் தந்தை கொல்​லப்​பட்​டார். மகன் சிகிச்​சை​யில் உள்​ளார்.

இந்​நிலை​யில், ஆஸ்​திரேலிய வெளி​யுறவு அமைச்​சர் பென்னி வாங்​குடன் இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் நேற்று தொலைபேசி​யில் பேசி​னார்.

அப்​போது, அப்​பாவி மக்களின் உயி​ரிழப்​புக்கு ஜெய்​சங்​கர் இரங்​கல் தெரி​வித்​தார். மேலும் இத்​துயர​மான தருணத்​தில் ஆஸ்​திரேலியர்​களுக்கு இந்தியா துணை நிற்​கும் என உறுதி அளித்​தார்​.

சிட்னி தீவிரவாத தாக்குதல்: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு
பெங்களூருவில் ஜனவரி 10-ம் தேதி இளையராஜா கச்சேரி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in