“என்னை கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கி ஆயிரம் ஏவுகணைகள் பாயும்” - ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

Updated on
2 min read

வாஷிங்டன்: “என்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். அதை உறுதி செய்யும் வகையில் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம்’ என்ற பேனரை ஏந்தி இருந்தனர். இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் உள்ளவரை (அதாவது என்னை) படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட ஈரான் முயன்றால், அதை எதிர்கொள்ளும் வகையில் அந்த தேசத்தை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன.

ஈரானின் அனைத்து பகுதிகளையும் தாக்குவதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ராணுவமும் அதற்கு தயாராக உள்ளது. இந்த உத்தரவு ஓராண்டு காலம் அமலில் இருக்கும். அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா மீண்டும் மோதல்

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் அமைதி ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யை கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்தது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்​பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தினர்.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் துறை​முக நகரங்​கள் பந்​தர் அப்​பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்​களில் அமெரிக்கா நேற்று முன்​தினம் குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் வான் பாது​காப்​புக் கருவி​கள், ரேடார் மையங்​கள், ஏவு​கணை தளங்​கள், 60-க்​கும் மேற்பட்ட கடற்​படை படகு​கள் அழிக்​கப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவ கட்​டுப்​பாட்டு மையம் சென்ட்​காம் தெரி​வித்​தது.

அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் இதர வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

பேச்சுவார்த்தை கோரிய ஈரான்

“பேச்சுவார்த்தையை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா சொல்லியுள்ளது” என்று இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in