“ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவாவிடில் நேட்டோ அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தை சந்திக்கும்” - ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், “உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதற்கு கூட்டு முயற்சி தேவை. இதில் நேட்டோ நட்பு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இணைய வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி மூலம் பயனடையும் நாடுகள், அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவ வேண்டும். இதற்கு எவ்விதப் பதிலும் இல்லாமலோ அல்லது எதிர்மறையான பதில் வந்தாலோ, அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.

நம்மிடம் நேட்டோ என்ற ஓர் அமைப்பு உள்ளது. நாங்கள் அவர்களிடத்தில் மிகவும் கனிவாகவே நடந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் அவர்களுக்கு உதவினோம்.

இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்பதைப் பார்ப்போம். ஏனெனில், ‘நாங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்போம்; ஆனால் அவர்கள் நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள்’ என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன். அவர்கள் நமக்குத் துணையாக இருப்பார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்காவைப் போலன்றி, ஐரோப்பாவும், சீனாவும் வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து வரும் எண்ணெயையே பெருமளவில் சார்ந்திருக்கிறது” என்றார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் சீனா உதவத் தவறினால், இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தான் திட்டமிட்டுள்ள சந்திப்பு ஒத்திவைக்கப்படக்கூடும் என்றும் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

நேட்டோ என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகளை உள்ளடக்கிய ஒரு ராணுவக் கூட்டணியாகும். இது கூட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது, இந்த அமைப்பில் உள்ள ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் ட்ரம்ப்</p></div>
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து நிறுத்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in