வடகொரியாவில் இருந்து தப்பிக்க மீனவர்கள் போல் உளவு பார்த்து 10 ஆண்டு திட்டமிட்டு 2 மணி நேரத்தில் தப்பிய குடும்பம்

வடகொரியாவில் இருந்து தப்பிக்க மீனவர்கள் போல் உளவு பார்த்து 10 ஆண்டு திட்டமிட்டு 2 மணி நேரத்தில் தப்பிய குடும்பம்
Updated on
2 min read

சியோல்: வடகொரி​யா​வைச் சேர்ந்த 9 பேர் கொண்ட ஒரு குடும்பம் 10 ஆண்​டு​கள் திட்​ட​மிட்​டு, 2 மணி நேரத்​தில் தப்பி தென் கொரியா சென்​றுள்​ளது.

வட கொரி​யா​வில் அதிபர் கிம் ஜாங் உன் தலை​மை​யில் அடக்​கு​முறை கம்​யூனிச ஆட்சி நடைபெறுகிறது. இங்​குள்ள மக்​களுக்கு போதிய சுதந்​திரம் இல்​லை. அங்கு வறுமை, பஞ்​சம் நில​வு​கிறது. அரசி​யல் ஒடுக்​கு​முறை மற்​றும் அடிப்​படை மனித உரிமை​கள் இல்​லாமல் இருப்​ப​தால் இங்​குள்ள மக்​கள் தென் கொரி​யா​வுக்கு தப்​பிச் செல்ல விரும்​பு​கின்​றனர்.

வட கொரி​யா​வைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்​பம் ஒன்​று, அங்கு வாழ பிடிக்​காமல் தென்​கொரி​யா​வுக்கு தப்​பிச் செல்ல கடந்த 10 ஆண்​டு​களாக திட்​ட​மிட்​டது. கடல் வழி​யாக தப்​பிச் செல்​வது​தான் ஒரே வழி. இதனால் மீனவர்​கள் போல் தப்​பிச் செல்ல கிம் இல்​-ஹியோக் என்​பவரின் தந்தை யோசனை கூறி​னார். இதனால் அவரது குடும்​பம் கடற்​கரை நகரில் குடியேறியது. அங்கு கிம் இல்​-ஹியோக், அவரது சகோ​தரர் கிம் யி-ஹியோக் ஆகியோர் படகு ஒன்றை வாங்கி மீன்பிடித் தொழிலை கற்​றனர். அடிக்​கடி கடலுக்கு சென்று அங்கு கடற்​படை​யின் ரோந்து பணி விவரங்​களை உளவு பார்த்தனர்.

இவர்​களின் திட்​டம் நிறைவேறு​வதற்​குள் கிம் சகோ​தரர்​களின் தந்தை இறந்து விட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி மஞ்சள் கடலில் லேசான புயல் உரு​வாகியது. அந்த நேரத்​தில் ரோந்து பணி தீவிர​மாக இருக்​காது. மேலும், கடல் தெளிவு இல்​லாமல் மங்​கலாக இருப்​ப​தால் ரேடார் கண்​காணிப்​பில் இருந்​தும் எளி​தாக தப்​பிக்​கலாம். கிம் சகோ​தரர்​களின் குடும்​பம் இரவு ரோந்து போலீ​ஸாருக்கு லஞ்​சம் கொடுத்து தங்​கள் பயணத்தை தொடங்​கினர்.

கிம் இல்​-ஹியோக்​கின் 5 மாதக் கர்ப்​பிணி மனைவி உட்பட அந்​தக் குழு​விலிருந்த பெண்​கள் மற்​றும் 2 குழந்​தைகள் முதலில் கண்​ணிவெடிகள் நிறைந்த பகு​தியை நடை பயண​மாக கடந்து சென்று படகில் ஏறினர். குழந்தைகளை சணல் சாக்​கு​களுக்​குள் மறைத்து வைத்​தனர்.

மீன்​பிடி படகு மஞ்​சள் கடலில் மிக​வும் மெது​வாக பயணித்​தது. அப்​போது​தான் ரேடார் கண்​காணிப்​பில் கடலில் ஏதோ ஒரு பொருள் மிதப்​பது போல் தெரி​யும். 2 மணி நேரத்​துக்​குள் அவர்​கள் வடகொரிய கடல் எல்​லையை கடந்து தென்​கொரிய கடல் பகு​திக்​குள் நுழைந்தனர். தென் கொரி​யா​வின் யியோன்​பியோங் தீவை நெருங்​கியதும், அவர்​களை அந்​நாட்டு கடற்​படை​யினர் மீட்டனர்.

தென்​கொரி​யா​வில் அந்த குடும்​பம் மகிழ்ச்​சி​யாக வாழத் தொடங்கியது. நான்கு மாதங்​களுக்​குப் பிறகு, சியோலில் கிம் இல்​-ஹியோக்​கின் மனை​விக்கு ஒரு பெண் குழந்தை பிறந்​தது. ஆனால், சில மாதங்​களுக்​குப் பிறகு, கிம் இல் -ஹி​யோக்​கின் இளைய சகோ​தரர் கிம் யி-ஹியோக், ஸ்கூபா டைவிங் விபத்​தில் இறந்​தார்.

கிம் இல்​-ஹியோக் தற்​போது தென் கொரி​யா​வில் சமையல் கலைஞ​ராகப் பயிற்சி பெற்று வரு​கிறார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு 2-வது பெண் குழந்தை பிறந்​தது. இவரது குடும்​பம் தற்போது தென்​கொரி​யா​வில்​ சற்​று நிம்​ம​தி​யான வாழ்க்​கை வாழ்​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in