

லக்னோ: வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வருடாந்திர கூட்டம் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செயலாளர் மவுலானா யசூப் அப்பாஸ் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டித்தது.
மேலும், அப்பாவி மனிதர்கள் யாரையும் கொல்வதை இஸ்லாம் கடுமையாகத் தடுக்கிறது என்றும், மதத்தின் பெயரால் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில், வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொது சிவில் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றை அமல்படுத்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பன உட்பட 23 அம்ச தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.