Published : 29 Sep 2017 10:50 AM
Last Updated : 29 Sep 2017 10:50 AM

ஆப்கனில் தாக்குதல்: 12 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தெற்கு காந்தகார் மாகாணம் மரப் மாவட்ட ஆளுநர் அலுவலக வளாகத்தில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 12 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

இதை மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜியாது ரானி தெரிவித்தார். பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கையால் தீவிரவாதிகள் மரப் மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் காரி யூசுப் அகமதி கூறுகையில், ‘‘மரப் மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றினர். சில மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆயுதங்களையும் மற்ற சில பொருட்களையும் அகற்றியபின் தலிபான்கள் அங்கிருந்து வெளியேறினர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x