Last Updated : 28 Sep, 2017 12:53 PM

 

Published : 28 Sep 2017 12:53 PM
Last Updated : 28 Sep 2017 12:53 PM

ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜப்பான் நாடாளுமன்றம்  அந்நாட்டு பிரதமர்  ஷின்சோ அபேவின் உத்தரவுப்படி கலைக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களால் ஜப்பானின் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

இதை கருத்திற் கொண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பிரதமர் அபே திங்கட்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

தேர்தல்

ஜப்பான் பொதுத் தேர்தல் தேதி  அறிவிக்கப்படாத நிலையில்,  வரும் அக்டோபர் 22-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துக் கணிப்புகளின்படி  நடைபெறும் தேர்தலில் அபேவின் லிபரல் டெமாகரடிக் கட்சிக்கு 44 சதவீதம், ஜனநாயக கட்சிக்கு 8 சதவீதம், டோமின் பர்ஸ்ட் கட்சிக்கு 8 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x