Last Updated : 18 Sep, 2017 02:50 PM

 

Published : 18 Sep 2017 02:50 PM
Last Updated : 18 Sep 2017 02:50 PM

வங்கதேசத்தில் 4 லட்சம் ரோஹிங்கியாக்கள் இடப்பெயர்வு: ஐ. நா.

வங்கதேசத்துக்கு அகதிகளாக இடபெயர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை 409,000 -ஆக அதிகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினராகவுள்ள ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து  வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடப்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு அகதிகளாக குடிப்பெயர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐ. நா.சபை தெரிவித்துள்ளது.

மேலும் அதிகரித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் வருகையால் முகாம்களில் இடப்பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் திறந்தவெளிகளிலும், பிளாஸ்டிக் கூரை அமைக்கப்பட்ட முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்ந்து வருகிறது. மழை இரு நாட்களுக்கு தொடரும் என்று வங்கதேச வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x